தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வருசநாடு மொட்டப்பாறையில் தடுப்பணையை சீரமைக்க கோரிக்கை

வருசநாடு: வருசநாடு அருகே, மொட்டப்பாறை பகுதியில், மூலவைகை ஆற்றில் சேதமடைந்துள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மொட்டப்பாறை பகுதியில், மூலவைகை ஆற்றின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின்னர், வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயமும் செழிப்படைந்தது.

இந்நிலையில் மூல வைகை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிறிது சிறிதாக சேதமடைந்து தற்போது முற்றிலும் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் அப்படியே செல்லும் நிலை உள்ளது. மேலும் தடுப்பணையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளன. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோரத்தில் உள்ள தோட்டத்திற்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

எனவே ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ள போதே தடுப்பணையை முழுமையாக சீரமைத்தால், வெள்ளப் பெருக்கின் போது தண்ணீர் தேங்கி நிற்பதுடன் பாதிப்புகள் தவிர்க்கப்படும் என கிராம மக்கள், விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து, அந்தப் பகுதியினர் கூறுகையில், ‘‘தடுப்பணை முற்றிலும் சேதமடைந்து விட்டதால் அதில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related News