தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி ரேணுகாசுவாமி கொலை வழக்கை நடிகர் தர்ஷன் இழுத்தடிக்கிறாரா?: நீதிமன்றத்தில் அரசு தரப்பு பகீர் குற்றச்சாட்டு

பெங்களூரு: கடந்த ஜூன் மாதம், கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி என்பவர் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா மற்றும் கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 7 பேரின் ஜாமீனை கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Advertisement

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு விசாரணையை தாமதப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.பிரசன்னா குமார், விசாரணை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 20 முறை விசாரணை நடந்தும், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான வாதங்கள் கூட இன்னும் தொடங்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்து வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், தங்களை விடுவிக்கக்கோரி பல மனுக்களையும் தாக்கல் செய்து வருவதாக அரசுத்தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்பாக, 2வது குற்றவாளியான நடிகர் தர்ஷன், சிறையில் தனக்கு சிறப்பு வசதிகள் செய்து தரக்கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், சிறைத்துறை விதிகளின்படி அனைத்து வசதிகளும் ஏற்கெனவே அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இருந்தபோதிலும், தர்ஷன் மீண்டும் சிறையை நீதிமன்றமே ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சிறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்களைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறையில் ஆய்வு செய்து, ‘தர்ஷனின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை’ என கடந்த 17ம் தேதி அறிக்கை அளித்தது. இதன்மூலம், ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே இதுபோன்ற செயல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர்’ என்று அரசுத்தரப்பு தனது மனுவில் சாடியுள்ளது.

Advertisement

Related News