தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை அருகே கந்தபரிச்சான் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி

*அதிகாரிகள் ஆய்வு

Advertisement

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு, கோவிலூர் பகுதி கந்தபரிச்சான் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு, வடகாடு கோவிலூர் பகுதியில் சமீபத்தில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. மேலும் அப்பகுதி சாகுபடி கோட்டங்களும் நீரில் மூழ்கி சாகுபடி செய்திருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் இடுப்பளவு நேரில் மூழ்கி தேங்கி நின்றது.

தேங்கிய நீர் அப்பகுதியில் பாசன வாய்காலாகவும், வடிகாலாகவும் உள்ள கந்தபரிச்சான் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து நின்றது. இதனால் நீர் வடிய முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கந்தபரிச்சான் வாய்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி நீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நீர்வளத்துறை சார்பில் சில நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் ஆனந்தன், மன்னார்குடி வெண்ணாறு வடிநில உபகோட்டம் எண்-2 உதவி செயற்பொறியாளர் சோலைராஜன் மற்றும் இளம்பொறியாளர் கலைச்செல்வன் உடன் இருந்தனர்.

Advertisement

Related News