தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்டு லாரி கவிழ்ந்து விபத்து

Advertisement

இம்பால்: ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் மணிப்பூரில் இம்பால் - ஜிரிபாம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு கனரக லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. ரெமல் புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இம்பால் - ஜிரிபாம் சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் லாரி சரிந்து விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தொடர் கனமழையால் அப்பகுதியில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. லாரி கவிழ்ந்ததன் காரணமாக சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் லாரி கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெய்து வரும் இஅடைவிடாத கனமழையால் அதிகப்படியான வெள்ளம், போக்குவரத்து இடையூறு மற்றும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இம்பால் பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement