தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மத வெறுப்பை தூண்டும் வகையில் எக்ஸ்தள பதிவு ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: எஸ்டிபிஐ தலைவர் வலியுறுத்தல்

சென்னை: மதவெறுப்பை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது எக்ஸ் தளத்தில் இந்திய பிரிவினை குறித்து வெளியிட்ட பதிவு, மதவெறுப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து, உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர், மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவது ஏற்க முடியாத செயலாகும்.

குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களிடையே மதவெறுப்பை தூண்டும் இத்தகைய பதிவு, ஆளுநரின் பதவிக்கு முற்றிலும் பொருந்தாது. ஆளுநரின் பதிவு ஒரு தரப்பை மட்டும் குற்றம்சாட்டி, முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரித்து, வெறுப்பை தூண்டுவதாக உள்ளது. இது வரலாற்றைத் திரித்து, கற்பனை கதைகளை கலந்து, உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயலாகும்.

இன்றைய சூழலில், தேசத்தின் நலனுக்கு, மக்களின் ஒற்றுமைக்கு, சாதி-மத வெறுப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரத்தில், ஆளுநர் போன்ற உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மதவெறுப்பு அரசியலை முன்னெடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது ஆளுநர் என்ற பதவிக்கு சற்றும் பொருந்தாத செயலாகும். எனவே, வரலாறு என்ற பெயரில் வெறுப்பைத் தூண்டும் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருந்து, இதுபோன்ற பிளவை தூண்டும் சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News