தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விளக்கம்

புதுடெல்லி: நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய காஜூராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் ஏழு அடி உயர விஷ்ணு சிலையை புனரமைத்து மீண்டும் நிறுவ வழிகாட்டுதல்களைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த 16ம் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் வழக்கு வந்தது.

Advertisement

அப்போது இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இது ,முற்றிலும் விளம்பரத்துக்கான வழக்கு. தெய்வத்திடம் சென்று ஏதாவது செய்ய சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால் நீங்கள் பிரார்த்தனை, தியானம் செய்யுங்கள் என்று மனுதாரர் ராகேஷ் தலாலிடம் கூறினார். காஜூராஹோ விஷ்ணு கோயில் சீரமைப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், தலைமை நீதிபதி கவாய் நேற்று கூறுகையில்,‘‘ நான் சொன்ன கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வேறுமாதிரி சித்தரிக்கப்படுவதாக ஒருவர் என்னிடம் சொன்னார். நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். கோயில் மேற்பார்வை தொல்பொருள் ஆய்வுதுறையின் கீழ் வருவதால், இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அந்த சூழலில் சொன்னோம்.காஜூராஹோவில் மிகப்பெரிய லிங்கங்களில் ஒன்றான சிவன் கோயிலும் இருப்பதாக நான் கூறியிருந்தேன்,’’ என்றார்.

Advertisement

Related News