பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
மதுரை: பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19,439 ஏக்கர் நிலங்களுக்கு ஆக மொத்தம் சேர்த்து 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8493 மி.க.அடி தண்ணீரை 18.09.2025 முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் மதுரை, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Advertisement
Advertisement