தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பதிவு செய்யும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில்கள் விருப்ப கட்டணம் வசூலிக்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வழக்கறிஞர்களாக சட்ட பட்டதாரிகளை பதிவு செய்யும் மாநில கவுன்சில்கள், விருப்ப கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா மாநில பார் கவுன்சில் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கிரண்பாபு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய பார் கவுன்சில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், அனைத்து மாநில பார் கவுன்சில்களும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதாகவும், கர்நாடகா பார் கவுன்சிலில் அடையாள அட்டை, சான்றிதழ், நல நிதி உள்ளிட்டவைகளுக்காக விருப்பத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதால் சட்டப்பூர்வ கட்டணத்தை விட அதிகமாக ரூ.25,000க்கு மேல் வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘விருப்ப கட்டணம் என்று எதுவும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். எந்த மாநில பார் கவுன்சில்களும், இந்திய பார் கவுன்சிலும் விருப்பத்தின் அடிப்படையில் எந்த தொகையையும் வசூலிக்க கூடாது. சட்டப்பூர்வ கட்டணத்தை மட்டுமே அவர்கள் வசூலிக்க வேண்டும்.

கர்நாடக மாநில பார் கவுன்சில் ஏதேனும் தொகையை வசூலித்தால் அதை நிறுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார். கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டத் தொழிலில் நலிந்த மற்றும் பின்தங்கிய சமூகத்தினரின் பங்களிப்பை குறைக்கும் என உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் கூறியிருந்தது.

Related News