கணவருடன் வாழ மறுப்பது துன்புறுத்தல்; கணவருடன் வாழாமல் தாய் வீட்டுக்கு செல்வது சித்ராவைத்தையே: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு!!
டெல்லி: கணவருடன் சேர்ந்து வாழாமல் கணவர், அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறுவது துன்புறுத்தலாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் பின்வரும் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கணவருடன் சேர்ந்து வாழாமல் கணவர், அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறுவது துன்புறுத்தலாகும் என்றும், கணவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுப்பதை தீவிர துன்புறுத்தலாக கருதவேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணவர் விவாகரத்து கேட்ட பிறகே பல குற்றச்சாட்டு கூறி கணவர் மீது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார். விவாகரத்து மனு விசாரணையில் உள்ளபோது, புகார் கூறி மனைவி வழக்கு தொடர்வதை நம்ப முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கணவருடன் வசிக்காமல், தாம்பத்யத்தில் ஈடுபடாததால் கணவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. மகனுடன் தந்தையை நெருங்க விடாமல் திட்டமிட்டு மனைவி தடுப்பதும் துன்புறுத்தலே என்றும், கணவன், மனைவி தகராறில் குழந்தையை பகடைக்காயாக்குவது குழந்தை மனநிலையை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்றுவிடுவதும் சித்ரவதைதான் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.