தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘ரீல்ஸ்’-யில் மூழ்கிய மனைவி குழந்தையுடன் மாயம்: போலீசில் புகாரளித்த கணவர் தவிப்பு

பாட்னா: பீகாரைச் சேர்ந்த ஜிதேந்திரா - தமன்னா பர்வீன் தம்பதியினர் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமண வாழ்க்கை பல ஆண்டுகளாக நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், பணி நிமித்தமாக ஜிதேந்திரா பெங்களூரு சென்றார். இதைத் தொடர்ந்து, தமன்னா சமூக ஊடகங்களுக்கு அடிமையாகத் தொடங்கினார். அவ்வப்போது ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தனது மனைவியின் நடவடிக்கை ஜிதேந்திராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எப்போதும் ரீல்ஸ்களில் மூழ்கியிருக்கும் தமன்னா, தனது கணவர் மற்றும் மகளை கவனிக்கவில்லை.
Advertisement

எப்போதும் ஆன்லைனிலேயே மூழ்கி இருக்கும் தனது மனைவியின் நடத்தை அவரது கணவருக்கு பிடிக்கவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் தமன்னா, தனது மகளை தூக்கிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை கண்டித்ததால், மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News