தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்குன்றம் அருகே சாலையில் திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி

புழல்: செங்குன்றம் அருகே உள்ள கிராமங்களில் மாடுகள் சாலையில் குறுக்கும் நெருக்கமாக செல்வதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடகரை, கிரான்ட் லைன், வடபெரும்பாக்கம், விளாங்காடுப்பாக்கம், கண்ணம்பாளையம், தர்காஸ், அழிஞ்சி வாக்கம், சென்றம்பாக்கம், புள்ளிலைன், தீர்த்தங்கரைபட்டு. கும்மனூர் மற்றும் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல்வேறு சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றி வருவதால் சாலை மற்றும் தெருக்கள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.

Advertisement

குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும்போது மின்விளக்கு வசதி இல்லாததினால் மாடுகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். ஒருசில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது.

எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்பு துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் குறுக்கும் நெருக்கமாக சுற்றி வரும் மாடுகளை சிறைப்பிடித்து மாட்டு தொழுவத்தில் அடைத்து மாட்டு உரிமையாளர்களிடம் அபராத தொகை வசூலிக்கவும் இனிவரும் காலங்களில் சாலைகளில் மாடுகளை விடக்கூடாது என மாட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News