தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கோட்டையில் நடந்த மத விழாவில் சந்நியாசி வேடத்தில் புகுந்து ரூ.1.5 கோடி திருட்டு: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் ஜெயின் மத நிகழ்ச்சியில், சந்நியாசி வேடத்தில் வந்த நபர் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டை வளாகத்தில் உள்ள பூங்காவில் ‘தஸ்லக்‌ஷண் மகாபர்வ’ என்ற 10 நாள் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயின் சந்நியாசி வேடத்தில் வந்த சந்தேக நபர், விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததாகக் கருதப்படும் பையுடன் தப்பிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

Advertisement

திருட்டு நடப்பதற்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். போலீசாரின் பலத்த பாதுகாப்பை மீறி சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசம் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் சுதிர் ஜெயினுக்குச் சொந்தமான இந்த பொருட்களை, ஜெயின் முனிவர் வேடத்தில் வந்த மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். திருடப்பட்ட பொருட்களில் சுமார் 760 கிராம் எடையுள்ள தங்க ஜாரி, தங்கத் தேங்காய் மற்றும் வைரங்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட 115 கிராம் எடையுள்ள சிறிய தங்க ஜாரி ஆகியவையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதிர் ஜெயின் தினமும் இந்த பொருட்களை பூஜைகளுக்காக கொண்டு வருவது வழக்கம். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை உறுதியளித்துள்ளது. இதற்கிடையே, இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பும் மூன்று கோயில்களில் இதே போன்ற திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சுதிர் ஜெயினின் உறவினரான புனித் ஜெயின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஜெயின் மத நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News