தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செயல்முறை ஆணை பெற்றவர்கள் விரைந்து மினி பேருந்து சேவையை தொடங்கிட வேண்டும்

*விழுப்புரம் கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் செயல்முறை ஆணை பெற்றவர்கள் விரைந்து மினி பேருந்து சேவையை தொடங்கிட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மினி பேருந்து திட்டத்தின் கீழ் செயல்முறை ஆணை பெற்றவர்கள் மினிபேருந்து சேவையை விரைந்து தொடங்குவது தொடர்பான ஆலோனை கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் விரிவான மினி பேருந்து திட்டம் 2024-னை செயல்படுத்திடும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் 109 வழித்தடங்களுக்கான அரசிதழ் வெளியிடப்பட்டு 109 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு 109 நபர்களுக்கு செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மாதம் 16ம் தேதி மினி பேருந்து திட்டம் தொடங்கப்பட்டு அன்று விழுப்புரம் மாவட்டத்தில் 25 மினி பேருந்து வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு மினி பேருந்து வாகன இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் செயல்முறை ஆணை பெற்றவர்கள் மினி பேருந்து சேவையை விரைந்து தொடங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் செயல்முறை ஆணை பெற்று மினி பேருந்து சேவை தொடங்காத நபர்களுக்கு உடனடியாக மினி பேருந்து வாகனங்கள் வாங்கி செயல்முறை ஆணை வழங்கப்பட்ட மினி பேருந்து வழித்தடத்தில் வாகனங்கள் இயக்கிட அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News