தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரியல் எஸ்டேட் அதிபர் ரூ.5 கோடி கேட்டு கடத்தல்

ஓசூர்: சூளகிரி அருகே, ரூ.5 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய நான்கு பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன்(34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம், இவரை பெண் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு வீட்டுமனை வேண்டுமென கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது காரில் சூளகிரியிலிருந்து பத்தளப்பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது அவரை மடக்கிய ஒரு கும்பல், அந்த காரிலேயே கடத்திச் சென்று, அவரிடம் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியது. மேலும், சீதாராமனிடம் செல்போனை கொடுத்து தெரிந்த நபர்களிடம் பணம் பெற்றுத் தருமாறு கட்டாயப்படுத்தினர்.

Advertisement

சீதாராமனும் தனக்கு தெரிந்தவர்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது, கடத்தல் கும்பலுக்கு தெரியாமல், தனது லொகேஷனை ஷேர் செய்துள்ளார். இதன் மூலம், அவர் கடத்தப்பட்டதை அறிந்த உறவினர்கள், ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் அனுப்பிய லொகேஷன் மூலம், அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து கடத்தல் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை கண்ட கும்பல் காரில் தப்ப முயன்றது. அவர்களை அட்கோ மற்றும் டவுன் போலீசார் நாலாபக்கமும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து சிக்கிய 4 பேரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News