தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னமனூர் அருகே ரெடிமேட் ஆடை நிறுவனத்தில் பயங்கர தீ; ரூ.50 லட்சம் துணிகள், பொருட்கள் நாசம்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து சேதமாகின. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர், ஓடைப்பட்டி சுக்காங்கல்பட்டியில் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். திருப்பூர் நிறுவனங்களில் ஆர்டர் எடுத்து ஆடைகள் தயாரித்து அனுப்பி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென கம்பெனியில் தீப்பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர் தினேசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சின்னமனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில்

Advertisement

நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த துணிகள், 30க்கும் மேற்பட்ட மெஷின்கள், பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. இவைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement