மறு வாக்குப்பதிவு நடந்த 11 வாக்குச்சாவடியில் 82% ஓட்டுப்பதிவு: காங்கிரஸ் முகவருக்கு போனில் மிரட்டல்
Advertisement
அதன்படி நேற்று 11 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ேநற்று நடந்த வாக்குப்பதிவின் போது எந்த விதமான கலவரமோ வன்முறையோ நடைபெறவில்லை.
இந்நிலையில் நேற்றிரவு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மறுவாக்குப்பதிவு நடந்த 11 வாக்குச் சாவடிகளிலும் மொத்தம் 81.6 சதவீத வாக்குகள் பதிவாகின. எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் அசம்பாவித சம்பவமோ, வன்முறையோ நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மொய்ராங்கம்பு சஜேப்பில் உள்ள வாக்குச்சாவடியை காலி செய்யுமாறு, வாக்குச்சாவடி முகவர்களை அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் மிரட்டியதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.
Advertisement