தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுமியை காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு!!

புதுக்கோட்டை: கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுமியை தொடர்ந்து ஒரு வரம் சிகிச்சை அளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இடைவிடாமல் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே குலவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி, பாப்பாத்தி தாம்பத்தினரின் 6 வயது மகள் மதுஸ்ரீக்கு திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டது. கண்கள் திறக்க முடியாமல் இருந்த சிறுமியை முதலில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement

அங்கு சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பு கண்டறியபடாததால் 24க்கு மணிக்கு நேரத்திற்கு பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ குழுவினர் கட்டுவிரியன் பாம்பு கடித்தால் தான் இது மாதிரியான பாதிப்பு வரும் என்று கூறி விஷ முறிவு மருந்து கொடுத்து சிகிச்சை தொடங்கினர். ஒரு வாரம் இடைவிடாமல் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்களுக்கு சிறுமியின் தாய் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். பாம்பு கடித்து 24க்கு மணி நேரத்திற்கு பிறகு வந்த போதிலும் துரிதமாக செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய அரசு மருத்துவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

Advertisement