தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரத்தினகிரி காவல் நிலையம் அருகே ஜாமீன் கையெழுத்து போட வந்த வாலிபர் வெட்டிக்கொலை: 5 பேர் சரண்

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அம்மனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(48), பைனான்சியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அவினேஷ்(28). இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி சுதாகரை அவினேஷ் சரமாரியாக வெட்டி உள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் அவினேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு அவினேஷ் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த 8 நாட்களாக ரத்தினகிரி காவல் நிலையத்தில் அவினேஷ் கையெழுத்து போட்டு வந்துள்ளார். இதேபோல் நேற்று அவினேஷ் கையெழுத்து போடுவதற்காக அரக்கோணத்தில் இருந்து பஸ்சில் வந்து ரத்தினகிரி மேம்பாலம் அருகில் இறங்கி கோயில் பிரதான வளைவு வழியாக காவல் நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.

இவர் தினமும் கையெழுத்து போடுவதற்கு ரத்தினகிரி வருவதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல், நேற்று அவினேஷை ஓடஓட சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து உயிரிழந்தார். தொடர்ந்து அந்த 5 பேரும் கத்திகளுடன் ரத்தினகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related News