தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்க கோரிய வழக்கு பதில் தராவிட்டால் 3 துறை செயலாளர் ஆஜராக வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டிப்பு

சென்னை: தாம்பரத்தை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், மாதவிடாய் காலங்களில், பெண்கள் சுகாதாரத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது. இந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்து சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகமாக உள்ளது. இதை வாங்க முடியாத ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காததால் கிராமப்புற பெண்களும், சுகாதார குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.

Advertisement

இதையடுத்து, ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் தமிழகத்தில் உள்ளதா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட துறையிடம் ேகட்டபோது, அப்படி எந்த திட்டமும் இல்லை என்று பதில் தரப்பட்டுள்ளது. எனவே, ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் பயன் அடையும் வகையில், ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ சானிட்டரி நாப்கின்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இறுதி அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, டிசம்பர் 16ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால், சமூக நலத் துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advertisement