தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: மந்திரவாதி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது மஷ்ஹூர் (48). வீட்டில் வைத்து பேய்களை விரட்டுவது உள்பட மந்திரவாதம் செய்து வந்தார். அவரிடம் மந்திரவாதம் செய்வதற்காக கோழிக்கோடு, மலப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வது வழக்கமாகும். இந்தநிலையில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் முகம்மது மஷ்ஹூர் மீது குன்னமங்கலம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், திருமணம் செய்வதாக கூறி முகம்மது மஷ்ஹூர் அவரது வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மந்திரவாதி முகம்மது மஷ்ஹூரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே அத்தோளி என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து மிரட்டி 40 பவுன் நகை, ரூ. 7 லட்சம் பணம் பறித்ததாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முகம்மது மஷ்ஹூர் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

Related News