தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே போதுமானது: தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

புதுடெல்லி: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே போதுமானது எனக்கூறி, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. டெல்லியில் கடந்த 2017ம் ஆண்டு, பள்ளிக்கு அருகே மரவேலை செய்யும் பட்டறையில் பணியாற்றி வந்த டோனி என்பவர், பத்து வயது சிறுமிக்கு உணவுப் பொருட்களைக் காட்டி ஆசைவார்த்தை கூறி, தனது கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

Advertisement

மேலும், இந்தச் சம்பவத்தை வெளியில் கூறினால், ‘சாக்கடையில் தள்ளி மூழ்கடித்துவிடுவேன் அல்லது மரக்கட்டையைப் போல் வெட்டிப் போட்டுவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்தனர். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் ஓரி, குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தார். தனது தீர்ப்பில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் நம்பிக்கையூட்டுவதாகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மட்டுமே ஒரே சாட்சியாக இருந்தாலும், அவரது வாக்குமூலம் நம்பகமானதாக இருந்தால், அதன் அடிப்படையிலேயே தண்டனையை உறுதி செய்ய முடியும்’ என்று நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement