தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2ம் இன்னிங்சில் தமிழ்நாடு நிதானம்: 107 ரன் முன்னிலை

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை எலைட் குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. முதலில் ஆடிய தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 182 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆந்திரா, 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தமிழகத்தின் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், கேப்டன் சாய் கிஷோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement

அதையடுத்து, தமிழ்நாடு அணி 2வது இன்னிங்சை, 2ம் நாளான நேற்று ஆடியது. துவக்க வீரர்கள் விமல் குமார் 20, ஜெகதீசன் ரன் எடுக்காமல் அவுட்டாகினர். பின் வந்த பாலசுப்ரமணியம் சச்சின் 51 ரன் எடுத்து ரன் அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து 107 ரன்னுடன் முன்னிலையில் உள்ளது. பிரதோஷ் ரஞ்சன் பால் 26, சாய் கிஷோர் ரன் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

Advertisement