தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணிப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து வந்தவர் கைது: புகார்கள் குவிவதால் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளை ஏமாற்றி போலி ஆவணங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நிலங்களை அபகரித்து வந்த வேலு என்பவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கம் அவலூர் காலனியை சேர்ந்தவர் கங்கன். இவர் கடந்த மார்ச் 26ம் தேதி காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், பெரும்புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் ஜெயராமன், வேலு ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் ஒன்றை காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன்.

Advertisement

ஆனால், இந்த புகார் சம்பந்தமாக இதுவரை எந்தவித முறையான விசாரணையும் நடைபெறவில்லை. இருவரும் பல நபர்களை கோடிக்கணக்கில் ஏமாற்றி நில அபகரிப்பு செய்துள்ளது எனக்கு தெரியவருகிறது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் போதெல்லாம் நீதிமன்றம் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என காவல் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

என்னை போல் சென்னையை சேர்ந்த தணிகாசலம் என்பவரும் வேலு மற்றும் சக்திவேல் மீது அளித்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் பழனி என்பவரையும் ஏமாற்றியுள்ளனர். இவர்களால் ஏமாற்றப்பட்ட 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் ராஜூ. அவரது மனைவி விமலா, மகள் சந்தியா.

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் காவல் நிலையத்தில் ஜெயராமன் மற்றும் வேலு மீது புகார் அளித்துள்ளார். அவர்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இருவரும் வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் வேலையை இழந்துள்ளார். எனவே தொடர்ந்து அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை அபகரித்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் மீது விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ராணிப்பேட்டை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜெயராமன் மற்றும் வேலு ஆகியோர் இணைந்து விவசாயிகளை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்தது தெரியவந்தது. மேலும், இதுபோல் 10 ஆண்டுகளில் கங்கன் நிலம் மற்றும் சென்னையை சேர்ந்த தணிகாசலம், விமலா உள்பட பலரிடம் மோசடியாக நிலங்களை அபகரித்து வந்தது விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து போலீசார் வேலு மற்றும் ஜெயராமன் மீது ஐபிசி 420, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அதிரடியாக வேலுவை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜெயராமனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட வேலு மீது பல்வேறு நில மோசடி புகார்கள் இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement