தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரம் - கோவை ரயிலில் போலி டிடிஆர் கைது

மதுரை: ராமேஸ்வரம் - கோவை இடையே திருச்சி வழியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த 20ம் தேதி இரவு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தது. ரயிலின் சாதாரண வகுப்பில் ஒரு நபர், பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். ரயில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ரயில் நிலையத்திற்கு வந்தபோது, திருச்சி ரயில்வே கோட்டத்தை சேர்ந்த டிடிஆர் சரவணன் ரயிலில் ஏறி, பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தார்.

Advertisement

அப்போது பயணிகள் ஏற்கனவே ஒருவர் டிக்கெட்டை சரி பார்த்ததாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், பயணிகள் காட்டிய டிடிஆரிடம் சென்று, அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், திருச்சி ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு பிரிவுக்கும் தகவல் தெரிவித்தார்.

ரயில் மானாமதுரை ரயில் நிலையத்துக்கு வந்ததும் அங்கு தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம், காட்டு பரமக்குடி தெளிச்சாத்தநல்லூரை சேர்ந்த ராம்பிரகாஷ் என்பதும், போலி டிக்கெட் பரிசோதகர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement