ராமேஸ்வரத்தின் முக்கிய தீவுகளை இணைக்கும் வகையில் 3 கூடுதல் மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்
Advertisement
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மிதக்கும் தோணித்துறை பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்கும் நன்றி. மண்டபம், பாம்பன் மற்றும் தேவிப்பட்டினத்தில் கூடுதலாக 3 மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத்திலுள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஒரு வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்த பாரம்பரியத்தை மாநில அரங்கில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாடு மாநில அரங்கினை உருவாக்குவதற்கு இந்திய அரசு 100% நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement