தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவம் மனுவை முடித்து வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவம் மனுவை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானது. ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதத்தில் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு 3 நாட்கள் மட்டுமே திருவிழா கொண்டாடப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, பிரம்மோற்சவ திருவிழாவை 10நாட்கள் கொண்டாட உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பிரம்மோற்சவம் திருவிழாவை 10 நாட்கள் நடத்த இயலுமா? என்பது குறித்து கோயில் நிர்வாகம் பதில்தர நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு உத்தரவிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவம் அடுத்த ஆண்டு முதல் 10 நாட்கள் நடக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்ற ஐகோர்ட் கிளை மனுவை முடித்து வைத்தது. மேலும், அடுத்த ஆண்டு பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிக்கை தரவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related News