தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரத்தில் அடுத்த சம்பவம் நள்ளிரவில் சிறுமியை கடத்தி செல்ல முயற்சி?

Advertisement

ராமேஸ்வரம் : தூய்மை பணியாளர்கள் தங்கும் கூடாரத்திற்குள் நள்ளிரவில் மர்ம நபர் புகுந்ததால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் நகர்ப்புறம் மற்றும் தெருக்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நகராட்சி துப்பரவு பணியாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் என இரு பிரிவுகளாக பணி செய்து வருகின்றனர்.

இதில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தூய்மை பணிக்கு ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் மின்வாரிய அலுவலகம் பின்புறமும், அக்னி தீர்த்தக் கடற்கரையிலும் இருபிரிவுகளாக குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்கும் கூடாரத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்த வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த கூடாரத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பின்புறம் வழியாக குதித்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த பெண்கள் அவரை பிடித்து ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த மர்ம நபர் அவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

உள்ளே சிறுமிகள் மற்றும் குழந்தைகள் உள்ளதால் கடத்துவதற்கு அல்லது தவறான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கத்தில் மர்ம நபர் வந்திருக்கலாம் கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் ஒப்பந்த நிறுவன பொறுப்பாளர் கோபி புகாரில், ராமேஸ்வரம் கோயில் காவல்நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். அக்னி தீர்த்த கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது, இச்சம்பவம் அப்பகுதியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement