ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை
ராமேஸ்வரம்: எல்லை தாண்டிய மீன்பிடித்த புகாரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பது இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.கடந்த மாதம் 13ஆம் தேதி நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தது.
Advertisement
அப்போது அங்க வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை 11 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறை காவலில் வைத்தனர். இந்த நிலையில், இன்று அவர்களுடைய சிறை காவல் முடிந்து ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த ஒரே நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை நிபந்தனை இன்றி விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
Advertisement