தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் 7பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!!

ராமநாதபுரம்: ஆக.9ல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்ட நிலையில், அனவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று இலங்கை மன்னார் நீதிமன்ற நீதிபதி முன் 7 மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் 7பேர் மீதும் மன்னார் மீன்வளத்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 6 மீனவர்களுக்கு ரூ.87,000 அபராதம் விதித்தார். மேலும், இருதய நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு மீனவருக்கு ரூ.14,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை மீனவர்கள் செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை என்றும் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகுக்கான விசாரணை வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement