தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம், கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்கள் தேர்வு : விரைவில் அதிகாரிகள் ஆய்வு

சென்னை : ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் வழிபட, உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அம்மாவட்டத்தில் உள்ள பாம்பன் பாலம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் போன்றவை, முக்கிய சுற்றுலா தலங்களாக திகழ்கின்றன.பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ராமேஸ்வரம் வந்து சென்ற பின், அங்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement

இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு 500 - 700 ஏக்கர் நிலம் உள்ள 5 இடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம்; கீழக்கரை தாலுகாவில் உள்ள களரி, மாணிக்கனேரி ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வாயிலாக, விரைவில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News