டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிப்பு
ராமேஸ்வரம்: டிச.16 முதல் ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் தனுர்மாத பூஜையை முன்னிட்டு வருகிற விசுவாவசு வருடம், மார்கழி மாதம் 1ம் தேதி 16.12.2025 செவ்வாய் முதல் 14.01.2026 ஆம் தேதி வரை தனுர்மாத பூஜையை முன்னிட்டு, கோயில் நடை திறக்கப்படும்.
* அதிகாலை 3.30 மணிக்கு திருக்கோயில் நடை திறப்பு
* அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை தரிசனம் நடைபெறும்.
* காலை 5.00 மணிக்கு தனுர்மாத திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று தேவாரம், திருவெம்பாவை ஓதுதல் தீபாராதனை நடைபெறும்
* அதிகாலை காலை 6.00 மணிக்கு திருவனந்தல் பூஜை
* காலை 7.30 மணிக்கு விளா பூஜை
* காலை 10.00 மணிக்கு கால சந்தி பூஜை
* பகல் 12.00 மணிக்கு உச்சி கால பூஜை
* நண்பகல் 1.00 மணிக்கு திருக்கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3.00 மணிக்கு நடை திறந்து 3.30 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும். மாலை 6.00 மணிக்கு சாயரட்சை பூஜை.
* இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜை
* இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும்.
உற்சவ காலங்கள் மற்றும் சுவாமி புறப்பாடு காலங்களில் மேற்சொன்ன பூஜை நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. .