தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரம் அருகே இறந்து கிடந்த புள்ளிமான்

Advertisement

தொண்டி: தொண்டி அருகே மர்மமான முறையில் புள்ளி மான் இறந்து கிடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே வனப்பகுதியில் புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. இவை இரை, குடிநீருக்காக அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் புகுந்துவிடுகின்றன. அப்போது தெருநாய் கடித்து மான்கள் உயிரிழப்பது தொடர்கிறது. இந்நிலையில், தொண்டி அடுத்த வட்டானம் குளம் பகுதியில் நேற்று புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானின் உடலை மீட்டனர். பின்னர், கால்நடை மருத்துவர் மூலம் மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், `உயிரிழந்தது 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஆகும். மானின் உடலில் பெரிய அளவில் காயங்கள் ஏதும் இல்லை. தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்திருக்கலாம்’ என்று தெரிவித்தனர்.

Advertisement

Related News