தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமதாஸ் ஆதரவாளரை கொல்ல முயற்சி முக்கிய குற்றவாளிகள் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண்

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரும், ராமதாஸ் ஆதரவு தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளருமான ம.க.ஸ்டாலின்(55), பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது புகுந்து கடந்த 5ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றனர். இதில் ஸ்டாலின், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில், வெடிகுண்டு தயாரித்து கொடுத்த லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மகேஷ், மருதுபாண்டி, சேரன், சஞ்சய் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவிடைமருதூரை சேர்ந்த ஆகாஷ் (எ) ஹரிஹரன் (20), மகாலிங்கம் (23), கும்பகோணம் பாணாதுறையை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் திட்டமிட்டு இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. முக்கிய குற்றவாளிகளான அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று சரணடைந்தனர்.

Advertisement