தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமதாஸ் இல்லத்துக்கும் அன்புமணி அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் சோதனை

திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கடும் மோதல் காரணமாக பாமக 2 அணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொல்ல அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து ராமதாசுக்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Advertisement

அவரது வீட்டு வாசலில் மெட்டல் டிடெக்டர் வசதியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் பாமக ராமதாஸ் தரப்பினர் மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை அவரது இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் மற்றும் மோப்பநாய் மூலம் 2 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தினர்.

இதில், வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும் அந்த மிரட்டல் போலியானது என்றும் தெரியவந்ததையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். மேலும், தோட்டத்தினுள் இருந்து அனுமதி அளித்த பிறகே அங்கு வருபவர்கள் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்து வருகின்றனர். இதேபோல், சென்னை தியாகராய நகரில் அன்புமணி கட்டுப்பாட்டில் இருக்கும் பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என தெரியவந்தது.

Advertisement

Related News