தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் புகார்

 

Advertisement

சென்னை: என் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்னை கொலை செய்ய வேண்டும் என்று தாக்குகிறார்கள் என்றால், முதன்மை குற்றவாளிகளான ஜெயபிரகாஷ், சடையப்பன், சங்கர் ஆகியோர்களை கைது செய்ய கூடாது என்று போலீசாரை ஒரு தரப்பினர் மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். ஒரு துக்க நிகழ்ச்சிக்கு செல்லும் போது என்னுடைய காரை ஒருவன் உடைக்கிறான். கவுதமன் என்பவன் என் கார் மீது கல்லை தூக்கி போடுகிறான்.

உடன் இருந்தவர்கள் தடுக்கவில்லை என்றால் என்னை கொலை செய்து இருப்பார்கள். வாழப்பாடியில் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இதை எதை காட்டுகிறது என்றால் காவல்துறையை மிரட்டி அவர்களை திசை திருப்பி உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பற்ற வேண்டும் என்றுதான். பாமகவில் இருக்கிற எனக்கே இந்த நிலைமை என்றால்..., அன்புமணியை நம்பி யார் சென்றாலும், அவர்களை கொலை செய்வார்கள். கொலையில் இருந்து தப்பித்துக் கொண்டால் போலீசை மிரட்டி வழக்கு போடுவார்கள். என் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.

Advertisement

Related News