தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாமகவை தன்வசப்படுத்தும் அன்புமணி?.. புதிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் நாளை முக்கிய ஆலோசனை

Advertisement

சென்னை: புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் நாளை காலை 10 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வரக்கூடிய நிலையில் தன்னுடைய உயிர் இருக்கும் வரை தானே தலைவராக நீடிக்கப்போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். மேலும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களை பொறுப்பிலிருந்தும் அன்புமணி நீக்கி வருகிறார். சட்ட விதிகள் படி பாமகவை தன்வசம் படுத்தக்கூடிய பணியை அன்புமணி தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக மாவட்ட அளவில் பொதுக்குழுவை கூட்டி பாமக தலைவர் அன்புமணி தலைமையில் 2026 தேர்தலுக்காக உழைப்போம் என்ற தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மாவட்ட அளவிலான பொதுக்குழுவை கூட்டி மாவட்ட தலைவர், செயலாளர்களை நியமிக்கவும் அன்புமணி உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றால் மட்டுமே தலைவர், செயலாளர் பதவிகளில் தொடரக்கூடிய வகையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மாநில தலைமைக்கு அனுப்பவும் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பாமக கட்சி விதிகளின் படி மாநில தலைவர்களை எவ்வாறு பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்களோ அதேபோல மாவட்ட அளவிலும் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்பட்ட தலைமைக்கு மட்டுமே கட்சியில் அதிகாரம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டங்களை அன்புமணி வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட பொதுக்குழுவை கூட்ட அன்புமணி அறிவுறுத்தியுள்ள நிலையில் ராமதாஸ் நாளை ஆலோசனை நடத்துகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் நாளை காலை 10 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். வட மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் தைலாபுரம் இல்லத்தில் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement

Related News