தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமதாஸ் ஆதரவாளரை கொல்ல முயன்ற 2 பேர் கைது: மேலும் 2 பேரை பிடித்து விசாரணை

திருவிடைமருதூர்: ராமதாஸ் ஆதரவாளரை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின்(55). ராமதாஸ் ஆதரவாளரான இவர், தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர். கடந்த 5ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது ஸ்டாலினை ஒரு கும்பல் வெடிகுண்டி வீசி கொல்ல முயன்றது. இதில் ஸ்டாலின், உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் 7 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு தயாரித்து கொடுத்த கும்பகோணத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பரை போலீசார் கடந்த 9ம்தேதி விசாரிக்க சென்ற போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

தொடர்ந்து குற்றவாளிகளை, தேடி தனிப்படை போலீசார் சேலத்தில் முகாமிட்டிருந்தனர். போலீசாரின் தீவிர தேடுதலில், சேலத்தில் பதுங்கி இருந்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுக்கிரவாத கட்டளை தெரு, கீழதூண்டி விநாயகம் பேட்டையை சேர்ந்த மகேஷ்(42), மருதுபாண்டி(32) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ஆடுதுறைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதுதொடர்பாக 2 பேர் அளித்த தகவலின் ேபரில் தனிப்படை போலீசார் நேற்று தஞ்சாவூரை சேர்ந்த கரன், சஞ்சய் ஆகிய 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement