தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்; வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு: திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் 7 மாதங்களை கடந்தும் நீடித்து வந்தது. இருவரும் போட்டி பொதுக்குழுவை நடத்தி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்ைகயில் ஈடுபட்டதாக கூறி அன்புமணியை நேற்று பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டார். அவருடன் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என உத்தரவிட்டார். ஆனால் அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை என வக்கீல் பாலு தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த வன்னியர் சங்க தொண்டர்கள் 21 போராளிகளுக்கு பாமக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்படும். இந்த வருடமும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் அன்புமணி தரப்பில் அஞ்சலி செலுத்த அவரது தரப்பில் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையிலான நிர்வாகிகள் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரகாசிடம் நேற்று மனு கொடுத்தனர்.

இதனை அறிந்த ராமதாஸ் அணியின் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் இன்று ஒன்று கூடி, அன்புமணி ஆதரவாளர்கள், அலுவலகத்தை கைப்பற்றி விடுவார்களோ என்று நினைத்து திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை பூட்டினர். மேலும், ‘இடத்தின் உரிமையாளரான செந்தில் என்பவரிடம், இந்த அலுவலகம் தலைவர் ராமதாஸ் பொறுப்பில் உள்ளது. அவர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். தலைவர் ராமதாஸ் நேரில் நினைவஞ்சலி செலுத்திய பின்னர் தான் அவர்கள் செலுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்கு அன்புமணி தரப்பு ஏற்கவில்லை. இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

Advertisement

Related News