தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநிலங்களவை செயலக செயல்பாடு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆய்வு

புதுடெல்லி: துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை செயலகத்தில் ஆய்வு நடத்தினார். கடந்த செப்டம்பர் 9 ம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து 12ம் தேதி மாநிலங்களவைத் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், மாநிலங்களவை செயலகத்தின் செயல்பாடுகள் குறித்து சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை செயலகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

Advertisement

இந்த சந்திப்பின் போது மாநிலங்களவைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் மாநிலங்களவை செயலகம் அளிக்கும் நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பு குறித்த விவரங்களை சி.பி.ராதாகிருஷ்ணனிடம் அதிகாரிகள் விளக்கினர் என்று மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது. புதிய துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ராதாகிருஷ்ணன் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநிலங்களவை தலைவர் நடத்துவது வழக்கம்.இந்தமுறை கூட்டத்தொடருக்கு முன்பாகவே புதிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். வரும் நவம்பரில் பீகார் சட்ட பேரவை தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement