தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநிலங்களவை தலைவராக பணியை தொடங்கியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக சார்பில் வாழ்த்து..!!

டெல்லி: மாநிலங்களவை தலைவராக பணியை தொடங்கியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மாநிலங்களவையில் திருச்சி சிவா வாழ்த்துகளை தெரிவித்தார். அவையை மட்டுமல்லாமல் அவை உறுப்பினர்களையும் காக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது. தங்களது வருகையால் புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் குரல் மட்டுமல்ல சிறுபான்மையினரின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அனைவரையும் சமமாக பார்க்கும் பாரம்பரியம், கலாச்சாரத்தில் சிறந்த தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளீர்கள். ஏற்கனவே தாங்கள் வகித்த அனைத்து பதவிகளிலுமே அனைவரும் சமம் என்ற கொள்கையை பிரதிபலித்தீர்கள். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மைய மண்டபத்தை ஏற்படுத்த அவைத் தலைவருக்கு திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கனி" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். சமன்செய்து சீர்தூக்கும் குறள்போல் அவையை நடுநிலையாக நடத்த திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்தார். எங்களுக்கும் பல கோரிக்கைள் உள்ளன, எங்கள் கோரிக்கைகள் கேட்கப்படும் வரை அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்போம் என தெரிவித்தார்.

Advertisement

மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் முழக்கம் காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர்., நெல் ஈரப்பதம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

Advertisement

Related News