தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவதூறு: வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைப்பு

கடலூர்: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாக அவதூறு பரப்பிய வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாக அவதூறு குற்றசாட்டை கூறி நேற்றைய தினம் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் அத்துமீறி மருத்துவமனைக்குள் நுழைய முயன்றார்.

Advertisement

அங்கு இருந்த பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார். இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். குறிப்பாக, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆவேசமாக பேசுதல், மிரட்டல், தவறான தகவல்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல், தொற்று நோயை பரப்புதல் என 5 பிரிவுகளின் கீழ் வேலூர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பது மற்றும் நிர்வாக காரணங்களுக்காக புழல் சிறை காவலர்கள் அவரை கடலூர் சிறைக்கு கொண்டு செல்லுமாறு போலீசாரிடம் அறிவுறுத்தினர். இதை அடுத்து போலீசார் அவரை கடலூர் சிறைக்குக் கொண்டு சென்று இன்று அதிகாலை கடலூர் சிறையில் வேலூர் இப்ராஹிமை அடைத்தனர்.

Advertisement