தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ் வானில் பெருவேந்தன் ராஜேந்திர சோழனின் புகழ் என்றும் ஒளிரும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

Advertisement

சென்னை: தமிழ் வானில் பெருவேந்தன் ராஜேந்திர சோழனின் புகழ் என்றும் ஒளிரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பதிவில் கூறியதாவது;

'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை' எனவிருந்த தமிழர் எல்லையை, கங்கையும் கடாரமும் கொண்டு விரித்திட்ட செயங்கொண்டானை தலைவணங்கிடும் நன்னாள் இது.

“நித்தில நெடுங்கடல், உத்திரலாடமும்,

வெறிமலர் தீர்த்தத்து, எறிபுனல் கங்கையும்,

அலைகடல் நடுவில், கலம்பலச் செலுத்தி கங்கையும் கடாரமும் கொண்டு" பெருவேந்தனாக விளங்கிய மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் வெகு சிறப்பாக இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறுகிறது.

தனிச்சிறப்புமிக்க அருங்காட்சியகமும், சோழகங்கம் நீர்வள ஆதார மேம்பாட்டுத் திட்டமும் தந்து, முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு - வையம் போற்றிடும் அந்த மாமன்னனுக்கு இந்நாளில் மற்றுமொரு புகழ்மாலை சூட்டியுள்ளது. தமிழ் வானில் பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் புகழ் என்றும் ஒளிரும்!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement