தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

Advertisement

ஜெய்ப்பூர்: போக்குவரத்து விதிகளை மீறி காரில் பயணம் செய்த புகாரின் பேரில் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி செய்கிறது. பிரேம் சந்த் பைரவா ராஜஸ்தான் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ பிரேம் சந்த் பைரவாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. அதில் பிரேம் சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைரவா திறந்த ஜீப் ஒன்றில் தன் நண்பர்களுடன் செல்கிறார். அவருடன் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் புஷ்பேந்திர பரத்வாஜின் மகன் கார்த்திகேயா மற்றும் சில அரசியல்வாதிகளின் மகன்கள் இருந்தனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியபடி ராஜஸ்தான் காவல்துறையினர் செல்லும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி கார் ஓட்டிய ஆஷூ பைரவாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் போக்குவரத்துதுறை வௌியிட்ட அறிவிப்பில், “அனுமதியின் வாகனத்தை மாற்றியமைத்ததற்கு ரூ.5,000, சீட் பெல்ட் அணியாத குற்றத்துக்கு ரூ.1,000 மற்றும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசி கொண்டு சென்றதற்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement