தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங். எம்எல்ஏ 6 மாதம் சஸ்பெண்ட்: இரவு முழுவதும் காங். உறுப்பினர்கள் தர்ணா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கட்சியின் மற்ற எம்எல்ஏக்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவை வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். ராஜஸ்தானில் அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடந்த விவாதத்தின்போது அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் பாகர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Advertisement

அவரை அவை காவலர்கள் வெளியேற்ற முயன்றபோது சக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அங்கிருந்து வெளியேறாமல் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை சட்டப்பேரவை தொடங்கியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ அவையை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து முழக்கமிட்டார்.

இதன் காரணமாக எம்எல்ஏ முகேஷ் பாகரை 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் வசுதேவ் தேவ்னானி உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த முடிவை கண்டித்து அவையின் மையப்பகுதிக்குள் வந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ரமிலா காதியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Related News