தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் துயரம் ஓடும் பேருந்தில் தீ 20 பேர் உயிரிழப்பு: 16 பேர் படுகாயம்

ஜெய்சால்மர்: ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் ஓடும் பேருந்தில் தீப்பிடித்து 20 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது.

Advertisement

ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. பயணிகள் அலறியடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். ஆனபோதும் 20 பேர் தீப்பிடித்து உடல்கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார், மருத்துவக்குழுவினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறிய போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்துக்கு, தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement