தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் கோர விபத்து அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி: 14 பேர் உடல் நசுங்கி பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஹர்மாரா பகுதியில் நேற்று பிற்பகல் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, திடீரென தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன் உள்பட 17 வாகனங்கள் மீது மோதிய லாரி இறுதியாக மற்றொரு லாரி மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News