தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தானில் அருவியில் ரீல்ஸ் எடுத்த போது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்: நண்பர்கள் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சோகம்

Advertisement

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் அருவியில் நின்று ரீல்ஸ் எடுத்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 150 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் புல்வாரா பகுதியில் உள்ள அருவிக்கு இளைஞர்கள் சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அருவியில் நின்று அவர்கள் ரீல்ஸ் எடுத்த போது திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் அவர்களில் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

அவருடன் இருந்த நண்பர்கள் அவரை பிடித்து இழுக்க முயன்றனர். ஆக்ரோஷமாக சென்ற நீரின் வேகத்தில் அந்த இளைஞர் அடித்து செல்லப்பட்டு 150அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தின் ஜெய்சல்மர், பாலி, ஜோத்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. பாலி பகுதியில் ஒரே நாளில் 25 செ.மீ வரை கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் அங்கு பல சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள சாத்திரி பகுதியில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அந்த வேனை அங்கிருந்தவர்கள் மற்றொரு வாகனத்தில் கயிறுகட்டி கரைக்கு இழுத்தனர். நல்வாய்ப்பாக வேனிலிருந்து குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதே போல கோரா சாலையில் ஜீப் ஒன்று 4 முதல் 5 அடி அழ பள்ளத்தில் சிக்கி கொண்டது. அதனை புல்டவுசர் கொண்டு மீட்டனர்.

Advertisement

Related News