தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜஸ்தான் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் புஷ்கர் கண்காட்சி: பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 1,500 கிலோ எடை எருமை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்று வரும் புஷ்கர் கண்காட்சியில் 1500 கிலோ எடை கொண்ட எருமை மாடு, ஒட்டகம் நடனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. ராஜஸ்தானில் புஷ்கரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமாண்ட கலை கண்காட்சியில் ராஜஸ்தான் மாநில கலை நிகழ்ச்சிகள் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். முக்கியமாக ஒட்டகங்கள், குதிரைகள், கால்நடைகளின் கண்காட்சி மிகவும் புகழ்பெற்றது.
Advertisement

கட்சியில் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஹரியானவை சேர்ந்த அன்மோல் எருமை மாடு ஈர்த்தது. கருகருவென, வனப்புடனும் 8வயதே நிரம்பிய எருமை 1500 கிலோ எடை கொண்டுள்ளது. சுமார் 23 கோடி ரூபாய் வரை கொடுத்து எருமையை வாங்க பலர் அணுகியும் விற்க சம்மதிக்கவில்லை என அதன் உரிமையாளர் கூறியுள்ளார். நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் பால் சுரக்கும் அன்மோல் எருமைக்கு வழக்கமான தீவனங்களுடன், பழங்கள், முட்டை, சோயா உள்ளிட்ட சத்தான பொருட்களே உணவாக கொடுக்கப்படுகிறது. இதற்காக தினமும் 1500 ரூபாய் வரை செலவிடப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

இதேபோல கண்காட்சியின் மற்றொரு ஈர்ப்பாக ஒட்டக நடனம் விளங்குகிறது. நாட்டிய பெண்களை போல ஒட்டகங்கள் கயிற்று காட்டிலும், தளத்திற்கு ஏற்ப முன்னகால்களை மாற்றி மாற்றி மேலே உயர்த்தி நடனம் ஆடியது பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது. இதேபோல குதிரை ஆட்டமும் பார்வையாளர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் உற்சாக பெருக்குடன் நடந்தது. அழகும், கம்பீரமும் ஒருங்கே பொருந்திய வெண்ணிற குதிரை நடனம் ஆடியது அனைவரும் கவர்ந்தது. கண்காட்சிக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒட்டக ஆட்டத்தை படம் பிடித்தனர். உலகம் முழுவதும் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புஷ்கர் கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement