தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலர்கள் காண்போரை கவருகிறது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் கார்த்திகை மாதத்தில் பூக்கும் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்து காணப்படும் இம்மலர்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இம்மலர்கள் மிகவும் சுத்தமான இடத்தில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை. இவைகளை கார்த்திகைப் பூக்கள் என்றும், கணவழிப்பூக்கள் என அழைப்பர்.

Advertisement

ராஜபாளையம் அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், செண்பகத் தோப்புக்கு செல்லும் சாலையிலும் இந்த மலர்கள் ஏராளமாக பூத்துக் குலுங்குகின்றன. கோயிலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை பார்த்து ரசித்து போட்டோ, செல்பி எடுத்துச் செல்கின்றனர். இம்மலர்களின் வேர்களில் இருக்கும் கிழங்குகள் சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சித்த மருத்துவத்திற்காக செங்காந்தள் மலர்களின் வேர்களின் கிழங்குகளை பறித்துச் சென்றுவிடுகின்றனர். வேர்கள் இல்லாததால் மலர்கள் கருகும் அபாயம் உள்ளது. மலர்கள் பூத்த உடனே வேரை ஒட்டியுள்ள கிழங்குகளை எடுத்துச் செல்கின்றனர். எனவே, வனத்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, தமிழக அரசின் மலராக போற்றப்படும் செங்காந்தள் மலர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News