தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜா அண்ணாமலைபுரத்தில் பெண்ணை துரத்தி கடிக்க முயன்ற பாக்ஸர் வகை நாய்: நாயின் நகம் கம்மலில் சிக்கியதால் காது கிழிந்தது

சென்னை:சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தெருவை சேர்ந்தவர் உஷா (45). இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இவரது வீட்டின் அருகே குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாக்ஸர் வகை நாயை வளர்த்து வருகிறார். உஷா சாலையில் நடந்து சென்ற போது, திடீரென அந்த நாய் உஷா மீது பாய்ந்து, அவரது சேலையை கடித்து இழுத்து கீழே தள்ளி கடிக்க முயன்றது.

Advertisement

இதை பார்த்த நாயின் உரிமையாளர் குமார், ஓடிவந்து தனது நாயை கட்டுப்படுத்தினார். தக்க சமயத்தில் நாயை உரிமையாளர் கட்டுப்படுத்தியதால் உஷா உயிர் தப்பினார். அப்போது நாயின் முன்கால் நகம் உஷாவின் இடது காதில் உள்ள கம்மலில் சிக்கியதால், உஷாவின் காது கிழிந்தது. உடனே அவரை நாயின் உரிமையாளர் குமார் மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து உஷா, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News